முகப்பு
தற்போதைய செய்திகள்

இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய சிதம்பரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர்!

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எஸ்.ஏ.டாங்கேவின் அகில இந்திய கம்யூ கட்சி பொதுச்செயலாளர் ஜி.பூராசாமி சென்னையில் கடந்த மார்ச் 29-ம் தேதி இடது சாரி கட்சி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எஸ்.ஏ.டாங்கேவின் அகில இந்திய கம்யூ கட்சி பொதுச்செயலாளர் ஜி.பூராசாமி சென்னையில் கடந்த மார்ச் 29-ம் தேதி இடது சாரி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஜி.பூராசாமி கடந்த சனிக்கிழமை சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரி கடிதம் அளித்தார். அப்போது 1986-ம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி  ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூ கட்சியின் அங்கீகரிக்கபப்ட்ட சின்னமான கதிர், அரிவாள் சின்னத்தை வழங்கியதை குறிப்பிட்டு ஆதரவு கேட்டார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜனையும், அவரது இல்லத்தில் சந்தித்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தனது ஆதரவு கேட்டு ஜி.பூராசாமி கடிதம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.