தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை திருவரங்குளம் பாரதியார் நகர் அருள்மிகு ஸ்ரீபுற்றடி மஹாசக்தி மாரியம்மன் கோவிலில் பால்குடம்

புதுக்கோட்டை திருவரங்குளம் பாரதியார்நகர் அருள்மிகு புற்றடி ஸ்ரீமஹாசக்தி மாரியம்மன் கோவிலில் 48வது மண்டல பூஜை நிறைவுவிழாவை முன்னிட்டு பால்குடம் மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை திருவரங்குளம் பாரதியார்நகர் அருள்மிகு புற்றடி ஸ்ரீமஹாசக்தி மாரியம்மன் கோவிலில் 48வது மண்டல பூஜை நிறைவுவிழாவை முன்னிட்டு பால்குடம் மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது

திருவரங்குளம் அம்பாள் குளக்கரையில் இருந்து இசைவாத்தியத்துடன் பால்குடம் மற்றும் அலகுகுத்தி நிகழ்ச்சி தொடங்கி மெயின்ரோடு வழியாக கோவிலை சென்றடைந்து அதன் பிறகு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மஹா தீபாராதனை காட்டபட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன 

அதன் தொடர்ச்சியாக மிகப்பெரிய அன்னதானம் நடைபெற்றது நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வேப்பங்குடி ஆலங்குடி தோப்புக்கொல்லைமுகாம் வம்பன் நால்ரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் எம்.விஸ்வநாதன் தலைவர் அ.சிவசந்திரபோஸ் செயலர் எம்.ஆறுமுகம். பொருளாளர் எம்.மாணிக்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT