சிதம்பரத்தில் 2வது நாளாக தொடர்மழை: மக்கள் மகிழ்ச்சி
சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து
சிதம்பரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை நீக்கிய புதன்கிழமை பெய்த பலத்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியுற்றனர்.
சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 2 தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால், வெப்பம் குறைந்து, குளிர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுற்றனர். மழைவிபரம் வருமாறு: சிதம்பரம்- 89 மி.மீ, அண்ணாமலைநகர்-79 மி.மீ, பரங்கிப்பேட்டை- 78 மி.மீ, சேத்தியாத்தோப்பு- 48 மி.மீ, புவனகிரி- 65 மி.மீ, காட்டுமன்னார்கோயில்- 62 மி.மீ, லால்பேட்டை- 77 மி.மீ.
காட்டுமன்னார்கோயில் அருகே வீட்டு மேல்கூரை இடிந்து விழுந்தது: காட்டுமன்னார்கோயில் அருகே ம.உத்தமசோழகன் கிராமத்தில் தொடர் மழையில் புதிதாக கட்டப்பட்டுவரும் நிர்மலா என்பவரது வீட்டின் மேல்கூரை புதன்கிழமை உள்வாங்கியது. இதில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.