விருதுநகர் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் போது கட்டு, கட்டாக இருப்பதாக கூறி திமுக-அதிமுகவினரிடையே பிரச்னை ஏற்பட்டது.
இதனால், வாக்கு எண்ணும் பணி சிறிது தாமதமானாது. விருதுநகர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வெள்ளைச்சாமிநாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செந்திக்குமார நாடார் கல்லூரி மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் தபால் வாக்குகள் எண்ணும் பணி காலையில் 8 மணிக்கு தொடங்கியது.
அப்போது, தபால் வாக்குகள் கட்டு, கட்டாக இருப்பதாக கூறி திமுகவின் முகவர்கள் வாக்கு எண்ணும் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. அதையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்து வைத்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அதிமுக-திமுகவினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கம் போல் வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.