முகப்பு
தற்போதைய செய்திகள்

மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் துணை இயக்குநர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குநர் ராஜேந்திரன் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

தற்போதைய செய்திகள்

மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் துணை இயக்குநர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குநர் ராஜேந்திரன் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குநர் ராஜேந்திரன் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் மம்சாபுரம் மற்றும் திருப்பத்தூர் பேரூராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையத்தை (வார்ஃபார் வாட்டர் திட்டம்) மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நீர் சுத்திகரிப்புக்குப் பின்னர் வரும் கழிவு நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவு நீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டுவிட்டதாய் விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் இந்தக் குறையை உடனடியாக நிவிர்த்தி செய்ய உத்தரவிட்டார். குழாய் செப்பனிடப்பட்ட இடத்தை மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக் காலத்தில் பேரூராட்சி பகுதியின் எந்தவித தொற்றுநோயும் ஏற்படாத வகையில் அனைத்து வார்டுகளிலும் துப்புரவுப் பணிகள் தினமும் நடைபெற்று, கொசு மருந்துகள் முறைப்படி தெளிக்கப்படவேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் எந்தத் தடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மழைக் காலத்தில் இங்குள்ள வாழைக்குளம் கண்மாய் கரையில் எந்தவித உடைப்பும் ஏற்படாத வகையில் வருவாய்துறை அலுவலர்களுடன் இணைந்து தினமும் இரு பேரூராட்சி பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.பின்னர் பேரூராட்சி உரக் கிடங்கில் மரக்கன்றுகளை அவர் நட்டார்.
ஆய்வின் போது அவருடன் மண்டல அலுவலக கண்காணிப்பாளர் இப்ராஹிம்ஷா, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், பேரூராட்சி தலைவர் ராஜா, துணைத் தலைவர் ப.அய்யனார், செயல் அலுவலர் சித்திரைக்கனி, விவசாய சங்கத் தலைவர் முத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →