முகப்பு
தற்போதைய செய்திகள்

மாதனூர் அருகே விவசாயி கொலை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை

மாதனூர் அருகே விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 நவம்பர், 2014 at 8:49 PM
பகிர்:

மாதனூர் அருகே விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், மாதனூர் அருகே பாலூர் ஊராட்சி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் விவசாயி தணிகாசலம் (வயது 59). பி.டெக் படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு மாதனூரில் இருந்து புதூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். புதன்கிழமை காலை அவ்வழியாக சென்றவர்கள் தணிகசாலம் இறந்து கிடப்பதை பார்த்துவிட்டு ஆம்பூர் தாலுகா போலீஸôருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் மற்றும் ஆம்பூர் தாலுகா போலீஸôர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.   தணிகாசலத்தை கொலை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும்.  அதுவரை சடலத்தை எடுக்க விடமாட்டோம் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நடவடிக்கை எடுப்பதாக போலீஸôர் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.