முகப்பு
தற்போதைய செய்திகள்

புதிய ரேஷன்கார்டு வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

புதிய ரேஷன் கார்டு வழங்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 13 நவம்பர், 2014 at 12:43 PM
பகிர்:

புதிய ரேஷன் கார்டு வழங்க கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ஆர்.அமர்நாத் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ்குமார், செந்தில்குமார், வினோதினி, பாலாஜி, அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பழைய ரேசன் கார்டுகளை புதுப்பித்து புதிய ரேசன் கார்டு வழங்க வேண்டும். முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்திய உதவி தொகையை உடனடியாக வழங்குதல், ரேசன்கார்டு வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் ரேசன்அட்டை வழங்கிட வேண்டும். மேலும் ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.