ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்?
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திச் செல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்?
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திச் செல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திச் செல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநகரைச் சேர்ந்தவர் கடற்கரை செட்டியார் மகன் வனமூர்த்தி (50).
இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சரஸ்வதி (48). இவர்கள் தற்போது சேத்தூரில் குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில் 25.6.14-ம் தேதி வனமூர்த்தி, தனது மகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் வெளியில் இருப்பதாயும், யாரும் கேட்டால் தெரியாது என்று சொல்லவும் கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டாராம். இதுவரை வனமூர்த்தி வீடு திரும்பாததையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவரை யாரும் கடத்திச் சென்றுள்ளார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்