ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் செயல்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி செவ்வாய்கிழமை வட்டார நண்பர்கள் நலச்சங்கம் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய்புரம் வட்டார நண்பர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கே.சேகர் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் துணைத் தலைவர் இல.முத்துச்சாமி, சங்கத்தின் பொருளாளர் இராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், செயலாளர் க.செல்வராஜ் வரவேற்புரை வழங்கினார். இதில், தளவாய்புரம் வட்டார பகுதி ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசால் அறிவிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், செயல்படாமல் இருக்கும் நிலையத்தை இங்குள்ள ஆ.ச.பழனிச்சாமி நாடார் கூட்டுறவு மருத்துவமனை கட்டட வளாகத்தில் உடனே செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், தேமுதிக மாவட்ட செயலாளர் ஜி.காளிராஜ், ராஜபாளையம் ஒன்றிய அதிமுக வட்டார ஊராட்சி உறுப்பினர், ராஜபாளையம் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.லட்சுமணன், திமுக கிளைச் செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் அ.பொன்னுச்சாமி மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தளவாய்புரம் வட்டார நண்பர்கள் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.