தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ்(33). இவர்கள் 2 பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒடையில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட வந்ததாக 2 பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ்(33). இவர்கள் 2 பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒடையில் தொடர்ந்து அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாம்.

இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் 2 பேர் மீதுள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீஸார் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT