கடலூர் காவல் நிலையத்தில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோர காவல் நிலையங்களான கடலூர் முதுநகர், கடலூர் துறைமுகம் ஆகியவற்றில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி. கே.சொக்கலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு
கடலூர் காவல் நிலையத்தில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி.கே.சொக்கலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோர காவல் நிலையங்களான கடலூர் முதுநகர், கடலூர் துறைமுகம் ஆகியவற்றில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி. கே.சொக்கலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் கோப்புகள், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது உயிர்பாதுகாப்பு கவசங்களை கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும். இது படகு கவிழ்வது, வலையில் சிக்கிக்கொள்வது போன்றவற்றிலிருந்து காப்பாற்றும். அதேப்போன்று மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடிக்க முயற்சிக்கக் கூடாது. இது தொடர்பாக இன்று (நவ.25) கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
Advertisement