முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்: தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமை தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் தேர்தல் பார்வையாளர் டி.என்.வெங்டேஷ் திடீர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தற்போதைய செய்திகள்

சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்: தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமை தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் தேர்தல் பார்வையாளர் டி.என்.வெங்டேஷ் திடீர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:06 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமை தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் தேர்தல் பார்வையாளர் டி.என்.வெங்டேஷ் திடீர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவடமட், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 1.1.2015-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்  15.10.14 முதல் நடைபெற்று வருகிறது. 18-வயது பூர்த்தியடைந்தவர்களை பெருமளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் SVEEP (Systematic Voters Education in Electoral Participation) திட்டத்தின் கீழ் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில்  வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் 128 மையங்களில் நடைபெற்றது.

தியாகராசா தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தை தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் மண்டல தேர்தல் பார்வையாளர் டி.என்.வெங்கடேஷ் திடீர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு மனுக்கள் அளிக்க வந்தவர்களிடம் முகாம் குறித்து விளக்கினார். 2015 ஜனவர் 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் புதியதாக குடிவந்தவர்கள் பெயர்களை இந்த முகாம்களில் வந்து சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மாற்றம், தகப்பனார் அல்லது கணவர் பெயர், உறவுமுறை, முகவரி, வயது மற்றும் புகைப்படம் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இதுபோன்ற சிறப்பு முகாம் 2.11.14-ம் தேதியும் நடைபெறும். மேலும் 10.11.14-ம் தேதி வரை தங்களது பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தினமும் முகாமிடும் அலுவலர்களிடம் மனுக்கள் அளித்து பயனடையலாம் என்றார் அவர். அப்போது உடன் வட்டாட்சியர் டி.சாந்தா, நகராட்சி ஆணையாளர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →