திருவண்ணாமலை அருகே இளைஞர் வெட்டிக் கொலை
திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த மாரியம்மன் கோவில் தெருவை லோகநாதன் மகன் ராஜ் குமார் (26) இன்று காலை திருவண்ணாமலை திருக்கோயிலுர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த மாரியம்மன் கோவில் தெருவை லோகநாதன் மகன் ராஜ் குமார் (26) இன்று காலை திருவண்ணாமலை திருக்கோயிலுர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜ் குமார் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டியது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுண் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்ய்பப்பட்ட ராஜ் குமார் கந்து வட்டி வசூலில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படுகிறது.