தற்போதைய செய்திகள்

வேலையில்லாத சோகம்: மனைவி குழந்தையுடன் கணவர் தீ வைத்துத் தற்கொலை

சென்னை பாலவாக்கம் அடுத்த செங்கனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42) மலர் (37) இவரின் குழந்தைகள் தரணி (7) பரணி (2). வெங்கடேசன் பாலவாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.

வாசு

சென்னை பாலவாக்கம் அடுத்த செங்கனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42) மலர் (37) இவரின் குழந்தைகள் தரணி (7) பரணி (2). வெங்கடேசன் பாலவாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.

2 மாதங்களுக்கு முன்னர் வேலை இழந்து வீட்டில் இருந்துள்ளார். வீட்டு வாடகை  செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார். வறுமையான சூழலில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து புகை வந்ததால், வீட்டு உரிமையாளர் வரதராஜன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து போலீஸார் வீட்டுக்குள் புகுந்து சோதனை செய்ததில், வெங்கடேசன், மலர், தரணி, பரணி ஆகியோர் தீக்காயமடைந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இவர்களில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், மலர், தரணி ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். 2 வயதுக் குழந்தை பரணி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT