முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் உருவபொம்மை எரிப்பு: தவாகவினர் 26 பேர் கைது

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் உருவபொம்மையை எரித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் உருவபொம்மையை எரித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் சட்டவிரோதமாகச் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளிகளை ஆந்திரக் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனை கண்டித்து சிதம்பரம் வடக்குரதவீதி தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்டச் செயலாளர் முடிவண்ணன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆந்திர முதல்வர் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவபொம்மையை எரிந்த 26 பேரை நகர போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.