முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுராந்தகம் அருகே வேன் மோதி மோட்டார் சைக்களில் சென்ற வாலிபர் பலி

மதுராந்தகம் அருகே கன்னிமங்கலத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது வேன் மோதிய விபத்தில பலத்த காயம் அடைந்து திங்கட்கிழமை இரவு பலியானார்.

Updated On : 7 ஏப்ரல், 2015 at 3:41 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:36 AM

மதுராந்தகம் அருகே கன்னிமங்கலத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது வேன் மோதிய விபத்தில பலத்த காயம் அடைந்து திங்கட்கிழமை இரவு பலியானார்.

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் பாஸ்கரன் (வயது 21). இவர் கிழக்கு கடற்கரை சாலை சூனாம்பேடு இறால் பண்ணையில் வேலை செய்ய, தனது மோட்டார் சைக்கிளில் வேடவாக்கத்தில் இருந்து வந்தார். பின்னர் தனது ஊருக்கு திரும்பி கன்னிமங்கலம் அருகே வந்தபோது, சித்தாமூரிலிருந்து சூனாம்பேடு நோக்கி வந்த வேன், எதிர்பாராதவகையில் பாஸ்கரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் பாஸ்கரன் தலையில் அடிப்பட்டு, பலத்த காயம் அடைந்தார். உடனே மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் திங்கட்கிழமை இரவு இறந்து போனார். விபத்தை ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த டிரைவர் வெற்றிசெல்வனை, சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் கைது செய்தார்.

இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.