முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் உருவபொம்மை எரிப்பு: தமிழ்த் தேசிய பேரியக்கத்தினர் 8 பேர் கைது

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய பேரியக்கத்தினர் 8 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

சிதம்பரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய பேரியக்கத்தினர் 8 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திராவில் 20 தமிழர்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றது சம்பவத்தை கண்டித்து சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தினர் நகர அமைப்பாளர் கு.சிவப்பிரகாசம் தலைமையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவபொம்மையை எரித்த சிவப்பிரகாசம் உள்ளிட்ட 8 பேரை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.