பழனியில் இளைஞர் கொலை
பழனியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டார்.பழனி சிவகுரு தெருவை சேர்ந்தவர் பாலன் மகன் அசோக்(20). இவர் எலெக்ட்ரீசியனாக
பழனியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
பழனி சிவகுரு தெருவை சேர்ந்தவர் பாலன் மகன் அசோக்(20). இவர் எலெக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். பழனி ராமர்கோயில் தெருவை சேர்ந்தவர் ராமு மகன் தியாகு என்ற தியாகராஜன்(20). இவர் சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த சிலமாதம் முன்பு இருவருக்கும் மோதல் ஏற்பட்டு எதிரிகளாக மாறினர். இதனால் ருவருக்குள்ளும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே அசோக் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த தியாகு குத்தீட்டியால் அசோக் மார்பில் தாக்கியதில் பலத்த காயமடைந்த அசோக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.
இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.