தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் ஜன.18ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:1 வயது குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்டவர்கள் போலியோவால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜன

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 18-ம் தேதி 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு 1068 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற இருக்கிறது.

இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:1 வயது குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்டவர்கள் போலியோவால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜன.18ம் தேதியும், பிபி.22-ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டங்களில் 1068 மையங்கள் அமைக்கப்பட்டு 1.64 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இதில், விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 487 மையங்களில் 61 ஆயிரத்து 333 குழந்தைகளுக்கும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 581 மையங்கள் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 17 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது.    மேலும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், ஊட்டச்த்து மையம், பள்ளிகள், சமுதாய கூடங்கள் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மாலை 5 மணி வரையில் வழங்கப்பட இருக்கிறது.

இப்பணியில் மொத்தம் 4452 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 31 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு அகதிகள் முகாம், நரிக்குறவர்கள், தாற்காலிகமாக குடிசைகளில் தங்கியிருப்பவர்கள் ஆகியோருக்கு போலியோ மருந்து சொட்டு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழா நடைபெறும் இடங்கள், திருமண அரங்குகளில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 41 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT