விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மெட்டுக்குண்டு கிராமத்தில் நடந்த நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் சார்பில் பல்வேறு உழவாரப்பணிகள் நடைபெற்றது.
மெட்டுிக்குண்டு கிராமத்தில் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் பழனிச்செல்வி தலைமை வகித்தார். இப்பள்ளியின் செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். இதில், கடந்த ஒரு வாரமாக கிராமத்தில் கோயில் உழாவாரப்பணி, கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் விழிப்புணர்வு, கிராம சாலை செப்பனிடுதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல், ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்புரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நகுலன், பாலகுரு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.