முகப்பு
தற்போதைய செய்திகள்

மண் திருட்டை தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் திருட்டைத் தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தற்போதைய செய்திகள்

மண் திருட்டை தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்: 6 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் திருட்டைத் தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:28 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் மண் திருட்டைத் தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள மம்சாபுரம், கீழூர் புதுகாலனியைச் சேர்ந்தவர் பொ.மகாலிங்கம் (52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் கிராமம் குட்டதட்டியில் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான 12 ஏக்கர் 99 சென்ட் நிலத்தை 15.2.10-ம் தேதி ஏலம் எடுத்து அனுபவித்து வருகிறார். இக்காட்டில் 6 ஏக்கர் அளவில் இருந்த மண், மணல் ஆகியவற்றை கடந்த 5 ஆண்டுகளாக கோட்டைப்பட்டியைச் சேர்ந்த வீரையா, தங்கராஜ், ஆறுமுகம், வைரமுத்து, முத்துக்குமார், ராஜாசிங் ஆகியோர் தோண்டி கடத்தி வந்துள்ளார்கள்.

இதனால், விவசாயம் செய்ய முடியாமல், மகாலிங்கத்தின் நிலம் பாதிப்படைந்துள்ளது. சனிக்கிழமை குறிப்பிட்ட இடத்தில் மண் அள்ளிக் கொண்டிருந்த இவர்களிடம் மகாலிங்கம் சென்று, சப்தம் போட்டுள்ளார். அப்போது அவர்கள் மகாலிங்கத்தை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் மகாலிங்கம் புகார் செய்தார். போலீஸார் குறிப்பிட்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →