ஜெயலலிதா விடுதலை: மொட்டை அடித்துக் கொண்ட அதிமுக எம்எல்ஏ
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் மொட்டை அடித்துக் கொண்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் மொட்டை அடித்துக் கொண்டார்.
ஜெயலலிதா உட்பட 4 பேரும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு வெளியானது.
இதையடுத்து புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், மகிழ்ச்சியோடு தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்துக் கொண்டார். உடன் எல்.பெரியசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.