முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை: தங்கத் தேர் இழுத்த அமைச்சர்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதற்கும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டியும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்

தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை: தங்கத் தேர் இழுத்த அமைச்சர்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதற்கும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டியும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதற்கும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டியும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்தரபாலாஜி சனிக்கிழமை தங்கத் தேர் இழுத்தார்.

விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில், கட்சியின் மாவட்டச் செயலாளரும், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் தங்கத் தேர் இழுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றதற்கும், மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்று தமிழகத்தை அமைதி, வளமான பாதையில் மனநிறைவுடன் ஆட்சி செய்ய வேண்டியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், மகளிர் அணியின் சக்திகோதண்டம், வழக்குரைஞர்கள் எம்.ஜெகதீசன், ஏ.மங்களசாமி, கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் அறுசுவை உணவுடன் ஏராளமானோருக்கு அன்னதானம் நடைபெற்றது.

பின்னர் ஆண்டாள் சன்னதியில் உள்ள ஸ்ரீவானமாமலை மடத்தில் அமைச்சர், சிறப்பு வழிபாடு நடத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →