முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பு ஏழை மாணவி மாநில அளவில் மூன்றாம் இடம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கோட்டையூரைச் சேர்ந்த ஏழை மாணவி பெ.லோக பிரியதர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பு ஏழை மாணவி மாநில அளவில் மூன்றாம் இடம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கோட்டையூரைச் சேர்ந்த ஏழை மாணவி பெ.லோக பிரியதர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கோட்டையூரைச் சேர்ந்த ஏழை மாணவி பெ.லோக பிரியதர்ஷினி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

கோட்டையூரைச் சேர்ந்தவர் பெருமாள்-சரஸ்வதி தம்பதியினரின் மகள் லோக பிரியதர்ஷினி. இவர் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் படித்து பொதுத் தேர்வு எழுதினார். இத் தேர்வில் இவர் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியலில் தலா 100 என மொத்தம் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாவதாக வந்துள்ளார்.

இவரை பள்ளியில் தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் ஆர்.சங்கரகிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

இந்த வெற்றி குறித்து மாணவி லோக பிரியதர்ஷினி தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், தான் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவராகி ஏழைகள், ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்வேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →