தற்போதைய செய்திகள்

ஆண்டிபட்டி அருகே தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து சாவு

DIN

பெரியகுளம்

ஆண்டிபட்டி அருகே தண்ணீர் பிடிக்க சென்ற மாணவி கிணற்றில் தவறி விழுந்து வியாழக்கிழமையன்று பலியானார்.

ஆண்டிபட்டி அருகே கே.காமட்சிபுரத்தை சேர்ந்த கோட்டைச்சாமி என்பவரின் மகள் மதுபாலா (14) இவர் இராஜதானியில் உள்ள அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் வியாழக்கிழமை காலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குடிப்பதற்கு தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது கால்தவறி கிணற்றில் விழுந்து மூழ்கி பலியானாராம். 

இது குறித்து ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வாகனம் வர தாமதமானதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மாணவியின் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீஸôர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT