வில்லியனூர் வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்: முதல்வர், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
புதுச்சேரியில் பிரசித்த பெற்ற வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரியில் பிரசித்த பெற்ற வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவிலில் 12-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 19-ந்தேதி வரை சாமிக்கு சிறப்பு பூஜையும், இரவு பல்வேறு வாகனத்தில் சாமி வீதியுலாவும் நடைபெற்றது.
இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்த போது பொதுமக்கள் வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையடுத்து சாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.