கோவை
கோவை காந்தி நகர் அருகே உள்ள பட்டாசு குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ அருகில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி பள்ளியில் பரவியுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியுள்ளனர். 6 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு கிடங்கு தொழிலாளர்கள் பலரும் இதில் சிக்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.