காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரும்போது மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தது.
ஆனால் அதனைச் செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது என்பது ஒரு ஏமாற்று வேலை. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. எனவே இந்த கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கு பெறாது என்று தெரிவித்தார்.