தற்போதைய செய்திகள்

மார்த்தாண்டம் அருகே தீக்குளித்த பள்ளி மாணவி சாவு

DIN

களியக்காவிளை, 

மார்த்தாண்டம் அருகே தீக்குளித்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

மார்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். தொழிலாளி. இவரது மகள் அபிஷா (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி வீட்டு குளியலையில் இருந்து அபிஷாவின் அலறல் சத்தம் கேட்டது. அங்கிருந்து புகையும் வந்ததாம். தொடர்ந்து உறவினர்கள் சென்று பார்த்த போது அவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்தது.

பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அபிஷா வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார்.

இது குறித்து மார்த்தாண்டம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT