தற்போதைய செய்திகள்

உசிலம்பட்டியில்  பெண்ணுக்கு கட்டாயக் கருக்கலைப்பு: கணவர், குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்கு

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெண்ணுக்கு கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக கணவர், குடும்பத்தினர் 6 பேர் மீது போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்த மகேந்திரன் மகள் ஐஸ்வர்யா(29). இவருக்கும் உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த வீரபாண்டிக்கும்(29), கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கப்பட்டதாம். 

இந்நிலையில் வீரபாண்டி குடும்பத்தினருக்கு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் இருப்பதாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்தனராம். திருமணத்துக்குப்பிறகு இதுதொடர்பாக ஜஸ்வர்யா தட்டிக்கேட்டாராம். இதனால் ஐஸ்வரியாவுக்குத் தெரியாமல் மருந்து கொடுத்து அவரது இரண்டு மாத கர்ப்பத்தை கலைத்து விட்டனராம்.

சம்பவம் தொடர்பாக ஐஸ்வரியா அளித்தப் புகாரின்பேரில் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸôர், கணவர் வீரபாண்டி, தாய் பழனியம்மாள், தந்தை வீரணன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT