தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வியாழக்கிழமை தில்லி சென்றார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் சந்திக்கவில்லை. இந்த நிலையில், தில்லியிலிருந்து மும்பை சென்று பன்னீர்செல்வம், பின்னர் ஷீரடி சாய்பாபா ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையிலிருந்து புறப்பட்டு மீண்டும் தில்லி சென்றார். திங்கள்கிழமை பிரதமர் மோடியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.