தற்போதைய செய்திகள்

தில்லியில் இன்று பிரதமரை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

தினமணி

தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வியாழக்கிழமை தில்லி சென்றார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் சந்திக்கவில்லை. இந்த நிலையில், தில்லியிலிருந்து மும்பை சென்று பன்னீர்செல்வம், பின்னர் ஷீரடி சாய்பாபா ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை மும்பையிலிருந்து புறப்பட்டு மீண்டும் தில்லி சென்றார். திங்கள்கிழமை பிரதமர் மோடியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT