சம்பல்பூர் (ஒடிசா): சம்பல்பூர் மாவட்டத்தில் தனுபலி பகுதியில் வேன் - டிரக் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர், மேலும் 5 பேர் படு காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிறகு பர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசெர்ச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.