மணல் குவாரிகளை மூடக்கோரிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட தனி நீதிபதி ஆணை பிறப்பித்திருந்தார். இந்நிலையில் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.