தற்போதைய செய்திகள்

பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல தீவிரவாதிகள் நடத்திய முயற்சி முறியடிப்பு: 2 பேர் கைது 

DIN

பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொல்ல நடந்த முயற்சியை, முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் 2 பேரை கைது செய்துள்ளதாகவும் லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

லண்டன், பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொலை செய்வதற்காக, அவர் நாள்தோறும் பயணிக்கும் டவ்னிங் தெருவில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டிருந்த சதித்திட்டத்தை முறியடிக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த நவம்பர் 28-ஆம் தேதி தீவிரவாத ஒழிப்பு படையைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  அவர்கள் வடக்கு லண்டனை சேர்ந்த ஜகரியா ரெஹ்மான் (20) மற்றும் தென்கிழக்கு பிர்மிங்காம் நகரை சேர்ந்த முகமது அகீப் இம்ரான் (21) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எனவும் அவர்களை வெஸ்ட்மெய்ஸ்டெர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்படுத்தினர்.   

தீவிரவாதிகள் இருவர் மீதும் சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரித்து பிரதமரின் வீட்டை தாக்கி, அவரை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொலை செய்ய திட்டமிடப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளின் திட்டம் தோல்வி அடைந்துள்ளது என ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. 

இதனிடையே பிரிட்டனில் கடந்த 12 மாதங்களில் 9 முறை தீவிரவாதிகளின் தீட்டிய சதி திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு உள்ளன என்று தெரசாவின் செய்தி தொடர்பாளர் நேற்று செவ்வாய்கிழமை கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT