தற்போதைய செய்திகள்

அரவட்லா சாலையில் 800 கிலோ ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

DIN

ஆந்திர மாநிலத்துக்கு காரில் கடத்த முயன்ற சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி பேர்ணாம்பட்டு அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

பேர்ணாம்பட்டு போலீஸார் இன்று தமிழக - ஆந்திர மாநில எல்லையான அரவட்லா சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் 800 கிலோ எடையுள்ள 16 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அதை ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து காருடன் அரிசியை பறிமுதல் செய்தனர். தரைகாடு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பைரோஸ் (23) கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT