தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

ANI

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதளை என்ற கடலோர கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் எல்லை மீறியதற்காக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், நாட்டுப் படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இலங்கை நீதிமன்றத்தில் அவர்கள் அனைவரையும் கடற்படை காவலர்கள் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், அந்த 4 மீனவர்களையும் ஜூலை 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்பின்னர் அந்த 4 மீனவர்களும் இலங்கையின் ஜாஃப்னா சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT