புதுதில்லி: ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: - ஊழலுக்கு எதிரான போரில் நிதிஷ் குமார் இணைந்துள்ளார். அவரது நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கில் இருந்து அல்லாமல், தனது சொந்த கணக்கிலிருந்து ஹிந்தியில் இந்த ட்விட்டை வெளியிட்டுள்ளார்.