புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் நடைபெற்றுவந்த போராட்டம் தாற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையிலும், வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் கடந்த 21 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை ஆட்சியர் கணேசன் இன்று அப்பகுதி போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.