தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் பயிர்க் கடனை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: சீமான்

தினமணி

தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விவசாயிகளின் நலனை காக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர். கே. நகரில் பூத் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.

இரட்டை இல்லையை காப்பாற்றுவதிலேயே அக்கறை காட்டுகின்றனர். அதனால் இன்று விவசாயிகள் வீதியில் உள்ளனர்'' என்று குற்றம் சாடினார். மேலும் கூறும் போது கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்றனர்.

ஆனால், தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை அந்த அண்டை மாநிலங்கள் கொடுப்பதில்லை. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு அதிகப்படியான வறட்சி நிதி ஒதுக்கி, தமிழகத்திற்கு குறைவான நிதியை ஒதுக்குகின்றனர்.

இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் பொறுப்புடன் செயல்பட வேண்டும். விவசாயிகளின் பயிர்க் கடனை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT