தற்போதைய செய்திகள்

எகிப்து நாட்டில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

DIN

மின்யா:  எகிப்து நாட்டில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் உயிரிழந்தனர்.

22 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் எகிப்திய இராணுவம் தளங்களை குறிவைத்திருக்கலாம் என்று அந்நாட்டு அதிபர் விவரிக்கப்படாத தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 10க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் முகமூடி அணிந்து இராணுவ உடையில் வந்து பேருந்து மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பாக பயணிகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றவேண்டும் என்று கூறியதாக இந்த தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியினர் கூறியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT