லண்டன்: லண்டனில் இருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் அனைத்தும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இது சைபர் அட்டாக் தான் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை, "என்று விமான அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.