தற்போதைய செய்திகள்

பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி: இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம்

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிஃபா சார்பில் நடத்தப்படும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான

DIN

சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிஃபா சார்பில் நடத்தப்படும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் இன்று மோதின. இதில் ஸ்பெயின் அணியை 5 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.  

இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த தொடர், கடந்த 6- ம் தேதி கோலாகலமாகத் தொடங்கி தில்லி, குவகாத்தி, கொல்கத்தா, நவி மும்பை, கோவா, கொச்சி ஆகிய 6 நகரங்களில் நடைபெற்று வந்தது. இதன் பைனலில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் துவக்கம் ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் முதல் பாதியின் 10,30 வது நிமிடத்தில் ஸ்பெயினின் செர்ஜியோ கோமஸ் இரட்டை அடி கொடுத்தார்.

இப்போட்டியில் இங்கிலாந்து 5, ஸ்பெயின் 2 என மொத்தமாக 7 கோல்கள் அடிக்கப்பட்டது. இதன்மூலம் உலகக்கோப்பை (17 வயது) அரங்கில் அதிக கோல் அடிக்கப்பட்ட பைனல் போட்டி என்ற புதிய சாதனை படைத்தது. முன்னதாக கடந்த 1995ல் நடந்த பைனலில் கானா 3 பிரேசில் 2 என மொத்தமாக 5 கோல்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் விளக்கு பூஜை! திரளானோர் பங்கேற்பு!

ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

SCROLL FOR NEXT