கேதர்நாத்: உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயில் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான சரக்குகளை ஏற்றிச்செல்லும் மி-17 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது இரும்பு தூண் மீது மோதியதில் ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளனாது.
இதில், விமானி உட்பட 4 பேர் இலேசான காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.