குஜராத்தில் பேருந்து - டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் பலி
குஜராத்தின் கட்ச் பகுதியில் தனியார் பேருந்தும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
காந்திநகர்: குஜராத்தின் கட்ச் பகுதியில் தனியார் பேருந்தும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்றும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisement
விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.