தற்போதைய செய்திகள்

பீங்கான் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: 2 பேர் பலி

DIN

புதுதில்லி: தில்லியில் உள்ள நவாடா பகுதியில் செயல்பட்டு வரும் பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள நவாடா பகுதியில் பீங்கான் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீவிபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 

ஆலையில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT