காஸியாபாத்: உத்தரப்பிரதேச உலா கவுஸ்ஹம்பி மெட்ரோ நிலையம் அருகே உள்ள குழாய் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த சுமார் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு அமைப்புகள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றன. இதனிடையே தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.