தற்போதைய செய்திகள்

சென்னையில் மூதாட்டியிடம் செயின் பறித்தவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

DIN

சென்னையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். 

சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நிர்மலா(65). இவர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த இளைஞர் திடீரென நிர்மலா கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடினார். 

நகையை பறித்துக்கொண்டு இளைஞர் ஓடுவது குறித்து நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை விரட்டிச் சென்று பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அதன்பிறகு மயிலாப்பூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். 

அவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த நகை, பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பல்லவன் நகரைச் சேர்ந்த சுனில் என்பது தெரியவந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT