தற்போதைய செய்திகள்

முதல்வர் பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகாரியாக வந்தார் பெருமாள்சாமி

DIN

சேலம் ஆத்தூரில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகாரியாக பெருமாள்சாமி வந்திருந்தார்.

பல ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் பெருமாள்சாமி. பெருமாள்சாமி முதல்வரை பாதுகாத்த சம்பவங்களுக்கு உதராணமாக ஒன்றை சொல்லலாம். முதுமலைக்கு ஒரு முறை சென்ற ஜெயலலிதா காவிரி  யானைக்கு உணவளித்து மகிழ்ந்தார். முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி  கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்ட குட்டியானை, தும்பிக்கையால் முதல்வரைத் தள்ளிவிட முயன்றது. பெருமாள்சாமிதான் குட்டியானையிடம் இருந்து முதல்வரைப் பாதுகாத்தார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு எங்கிருக்கிறார் என தெரியவில்லை என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முதல்வர் வருகைக்கான ஆய்வுகளை மேற்கொண்ட பெருமாள்சாமி, இன்று மீண்டும் முதல்வர் பாதுகாப்பிற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT