குஜராத் அருகே எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் திடீரென தீ: 26 பேர் பத்திரமாக மீட்பு
குஜராத் கடல்பகுதியில் எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடலோர காவல் படையினர் கடும்
கான்ட்லா: குஜராத் கடல்பகுதியில் எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடலோர காவல் படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எம்.டி. ஜென்னேசா என்ற கப்பல் 30 ஆயிரம் டன் எண்ணெய்ப் பொருட்களுடன் குஜராத் மாநிலம் தீனதயாள் துறைமுகத்திலிருந்து சுமார் 15 கடல்மைல்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு வெடித்தது.
தகவல் அறிந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்ட கடலோர காவல்படையினர், கப்பலில் இருந்த குழுவினர் 26 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
ஆளில்லாத விமானங்கள் மூலம் தீயை அணைப்பதற்காக தண்ணீர் இறைக்கப்பட்டது. கடலில் எண்ணெய்க் கொட்டியதா என்பதை குறித்து விளக்கமளிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.