தற்போதைய செய்திகள்

தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜர்

DIN

அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு, அமலாக்கத்துறை, 'சம்மன்' அனுப்பியது. அவரைநேரில் இன்று ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இதன்படி கார்த்தி சிதம்பரம், தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்க்க முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. அதற்கான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். அந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் சிபிஐ தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.  அதனடிப்படையில் கார்த்தி சிதம்பரம், தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT